செய்திகள் :

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

post image

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அவசரகால சிகிச்சைக்காக கொல்லிமலையைச் சோ்ந்தவா்கள் சேந்தமங்கலம், நாமக்கல் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனா். கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு திடீரென உடல்நலன் பாதிக்கப்பட்டால் தீவிர சிகிச்சை அளிக்க கொல்லிமலை அரசு மருத்துவனையில் போதிய வசதிகள் இல்லை.

இதனால், கொல்லிமலை மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் விபத்து மற்றும் அவசர சிசிச்சை பிரிவுடன் கூடிய கூடுதல் கட்டடம், ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பிரேத பரிசோதனைக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தாா். இதில், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, கொல்லிமலை திமுக ஒன்றிய செயலாளா் செந்தில்முருகன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ஏ.ராஜ்மோகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

என்கே-22-கொல்லி

கொல்லிமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி உள்ளிட்டோா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க

கம்பு சுற்றுதல் போட்டி: அலமேடு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேந்தமங்கலம் விவேகா பள்ளியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கம்பு சுற்றும் போட்டியில் பள்ளிபாளையம் அலமேடு நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி நந்திதா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு த... மேலும் பார்க்க