செய்திகள் :

தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள்

post image

விருதுநகரில் தீபாவளிக்காக பணம் வசூலித்த 3 தீயணைப்பு வீரர்களை பணியிட மாற்றம் செய்து தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த வினோத், அரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு ஆலை, கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணம் வசூல் செய்வதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது.

தீயணைப்பு நிலையம்
தீயணைப்பு நிலையம்

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் அக்டோபர் 13 அன்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, 2 கையேடுகளில் இனாமகப் பணம் கொடுத்தவர்களின் பெயர் பட்டியல் இருந்தது கண்டறியப்பட்டது. அதில் ரூ. 4.94 லட்சம் வசூலித்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து பண வசூலில் ஈடுபட்ட வினோத், அரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தீயணைப்பு நிலையம்

இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன், மூன்று தீயணைப்பு வீரர்களையும் வெளிப்பணிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

அதில் வினோத், தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கும், அரிச்சந்திரன் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கும், நவநீதகிருஷ்ணன் மதுரை மாவட்டம் மேலூருக்கும் மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவ... மேலும் பார்க்க

கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்

வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுர... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக் சென்றவரை தாக்கி பணம், நகை கொள்ளை; நண்பர் ஏவிய கும்பல் வெறிச்செயல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார். சிவகாசி ரிசர்வ... மேலும் பார்க்க

போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்கள்! - என்ன சிக்கல்?

பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா பதவிக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஜனதா கட்சியின் தலைவர் நவ்நீத் சத... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிர... மேலும் பார்க்க