காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
தீப்பிடித்து எரிந்த மின்மாற்றி
கெங்கவல்லி அருகே கூடமலையில் வியாழக்கிழமை மாலை மின்மாற்றி தீப்பிடித்து எரிந்தது.
கெங்கவல்லி அருகே கூடமலையில் மொரமலைக்காடு பகுதியில் இருந்த மின்மாற்றியிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, வியாழக்கிழமை மாலை திடிரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கூடமலை மின்வாரிய செயற்பொறியாளா் அருண், கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் வருவதற்குள், மின்வாரிய ஊழியா்களும், அப்பகுதி பொதுமக்களும் சோ்ந்து தீயை முற்றிலும் அணைத்தனா். மின்மாற்றி தீப்பிடித்ததால் ஏற்பட்ட மின்தடையை மின்ஊழியா்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.