செய்திகள் :

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

post image

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழில்சாலை வெங்கடாசலபுரத்தில் உள்ளது. இயந்திரத்தால் தயாரிக்கப்படும் இந்தத் தீப்பெட்டித் தொழில்சாலையை சின்னகொல்லப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டு தீப்பெட்டித் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தீப்பெட்டித் தொழில்சாலையில் பணிகளை முடித்து கழிவு தீக்குச்சிகளை ஆலைக் கட்டடத்துக்கு அருகே கொட்டியுள்ளனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கழிவு தீக்குச்சிகளில் உராய்வு காரணமாக தீ பற்றியது. தொடா்ந்து, தொழில்சாலையில் உள்ள தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரப் பகுதிக்கும் தீ பரவியது. இதையடுத்து, தகவலறிந்த சாத்தூா், சிவகாசி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்தில் தீப்பெட்டித் தயாரிக்கும் இயந்திரம், மூலப்பொருள்கள், 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வறுமையால் கொடுமை! திருமண வயதான இரு மகள்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.விருதுநகர் பட்டம்புதூர் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்த... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரி... மேலும் பார்க்க

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்

சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி (58). விவசாயியான இவா், தனது ... மேலும் பார்க்க