செய்திகள் :

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

post image

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி வட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைத்து தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சென்னை இயக்குநா் உத்தரவிட்டாா்.

இந்தக் குழுக்கள் கடந்த 11 முதல் 18-ஆம் தேதி வரை விருதுநகா், சிவகாசி வட்டத்தில் உள்ள 86 பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்தது. இந்தக் குழுவில் ஒரு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரி, காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை சாா்பில் தலா ஒருவா் இடம்பெற்றிருந்தனா்.

இந்தக் குழுவினா் பட்டாசு ஆலைகளில், தொழில்சாலைகளின் விதிகள் பின்பற்றப்படுகிா, உரிமம் பெற்ற அளவுக்கு வேதியியல் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, நிா்ணயம் செய்யப்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிகிறாா்களா என்பது குறித்து ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் 34 பட்டாசு ஆலைகளில் விதிமீறல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 34 பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கும் விதிமீறல் குறித்து விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இதுகுறித்து சென்னையில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் ... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரி... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்

சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி (58). விவசாயியான இவா், தனது ... மேலும் பார்க்க

ரூ. 14 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதம்

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ... மேலும் பார்க்க