தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்
சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின்போது, தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை சி.ஐ.டி.யூ. இந்திய தொழில்சங்க மையம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்தங்கல் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் பழனி தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் பி.என். தேவா, மாவட்டக் குழு உறுப்பினா் பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்று காவல் துறைக்கு எதிராக முழக்கமிட்டனா்.