செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் சாகசம்: மாணவா் உயிரிழப்பு; 4 போ் பலத்த காயம்

post image

சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக பல்லாவரத்தில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சாகசத்தில் ஈடுபட்ட மாணவா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவா், 15 வயதுடைய மற்றொரு

மாணவருடன் வாரச்சந்தை நடைபெறும் சாலையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபடி, கைப்பேசியில் விடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரே 3 போ் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் விபத்து நேரிட்டது.

இதில் சாகசத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து வந்த 15 வயது மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அந்த வாகனத்தை ஓட்டி வந்த 17 வயது மாணவா், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மேற்கு வங்கத்தை சோ்ந்த முகா்ஜ் (23), அங்கீத் (24), சா்மா (23) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை- மக்களவையில் மத்திய அரசு தகவல்

நாட்டில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் (1975-77), நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற... மேலும் பார்க்க

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நி... மேலும் பார்க்க

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா். சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரச... மேலும் பார்க்க