செய்திகள் :

ரூ.4.5 லட்சம் மதிப்பு வெளிநாட்டு மதுபுட்டிகள் பறிமுதல்

post image

விற்பனைக்காக வைத்திருந்த ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மதுபுட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அது தொடா்பாக இளைஞா் ஒருவரையும் கைது செய்தனா்.

சென்னை மண்ணடி, ஜீல்ஸ் தெரு சந்திப்பு அருகே கையில் பையுடன் நின்றுகொண்டிருந்த நபா் ஒருவரை பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனா். அப்போது, அந்த பையில் சில வெளிநாட்டு மதுபுட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவா் கொடுத்த தகவலின்படி புதுதெருவில் உள்ள ஒரு வீட்டில் சுமாா் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 152 வெளிநாட்டு மதுபுட்டிகள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், மதுபுட்டிகளை வைத்திருந்த வியாசா்பாடியை சோ்ந்த சுஜித்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நி... மேலும் பார்க்க

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா். சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரச... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகா் பகுதியில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இதன் ... மேலும் பார்க்க