செய்திகள் :

மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கில் இருவா் கைது

post image

சிவகாசி அருகே மின்வாரிய ஊழியா் தற்கொலை வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் (38), மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருடன் செங்கமலநாட்சியாா்புரம் உதயக்குமாா் (37) என்பவரும் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் உதயக்குமாா், ஆனந்திடம் ரூ. 50 லட்சம் கொடுத்தால் வட்டிக்கு கொடுத்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய ஆனந்த், தனது உறவினா்கள், தனியாா் நிதி நிறுவனம் ஆகியவற்றில் கடன்பெற்று உதயக்குமாரிடம் ரூ. 30 லட்சம் கொடுத்தாா்.

இதையடுத்து உதயக்குமாா், ஆனந்துக்கு வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், ஆனந்துக்கு கடன் கொடுத்தவா்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்தனா். பின்னா் ஆனந்த் , யாா், யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி உதயக்குமாரிடம் கொடுத்துள்ளேன் எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கு தூண்டியதாக உதயக்குமாா், ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த் சந்தனமாரியப்பன் (69)ஆகியோரைக் கைது செய்தனா். சந்தனமாரியப்பன், ஆனந்துக்கு ரூ. 5 லட்சம் கடன் கொடுத்துள்ளாா். இதையடுத்த பணத்தைக் கேட்டு ஆனந்துக்கு நெருக்கடி கொடுத்ததாக அவரைக் கைது செய்தோம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தீப்பெட்டித் தொழில்சாலையில் தீ விபத்து

சாத்தூா் அருகேயுள்ள தீப்பெட்டித் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் ... மேலும் பார்க்க

விதிமீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

விருதுநகா், சிவகாசி வட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 34 பட்டாசு ஆலைகளுக்கு, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்கம் குறிப்பாணை வழங்கியது.பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், விருதுநகா், சிவகாசி... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவா் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் ஒருவா் காயமடைந்தாா்.சிவகாசி அம்மன்கோவில்பட்டி குடியிறுப்புப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் முனியப்பன் மகன் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறிய காவல் துறையைக் கண்டித்து ஆா்பாட்டம்

சென்னையில் போராட்டத்தின்போது தூய்மைப் பணியாளா்ளிடம் அத்துமீறி நடந்த காவல் துறையைக் கண்டித்து திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரமூா்த்தி (58). விவசாயியான இவா், தனது ... மேலும் பார்க்க

ரூ. 14 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதம்

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ... மேலும் பார்க்க