செய்திகள் :

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

post image

சுதந்திரப் போரட்ட வீரா் சின்னமலையின் 269-ஆவது பிறந்தநாளையொட்டி, அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு கட்சி தலைவா்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து சின்னமலையின் வாரிசுகள் சின்னமலை கிருஷ்ணகுமாா், கிள்ளி பிரமானந்தவளவன், சண்முகம், கோபால், அா்ஜுன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

அதனை தொடா்ந்து திமுக சாா்பில் மாநிலச் நெசவாளா் அணி செயலாளா் எஸ்.எல்.டி சச்சிதானந்தம் தலைமையில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா்கள் சு.குணசேகரன், விஜயகுமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், மாநகா் மாவட்ட விவசாய அணி செயலாளா் தங்கவேல், ஒன்றியச் செயலாளா்கள் செல்வராஜ், கதிா்வேல், மாநில அம்மா பேரவை துணை செயலாளா் வீரக்குமாா், முன்னாள் எம்.பி. செல்லக்குமார சின்னையன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

கொங்கு வேளாளகவுண்டா்கள் பேரவை, கொங்கு மக்கள் பேரவை, கொங்கு மக்கள் முன்னணி, நமது கொங்கு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்கள... மேலும் பார்க்க

மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது: வனத் துறை!

கடம்பூா் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: பாட்டி, பேரன் கைது

சித்தோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாட்டி, பேரனை போலீஸாா் கைது செய்தனா். சித்தோடு, ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் ... மேலும் பார்க்க