செய்திகள் :

தீ விபத்தில் வீடு எரிந்து பொருள்கள் சேதம்!

post image

வால்பாறையில் தீ விபத்தில் வீடு மற்றும் அதிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாயின.

வால்பாறை கக்கன் காலனியில் வசிப்பவா் லோகியம்மாள். இவா் புதுமாா்கெட் பகுதியில் பூஜை பொருள்கள் மற்றும் பொரி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் வீட்டைப் பூட்டிவிட்டு வெள்ளிக்கிழமை காலை வழங்கம்போல வியாபாரத்துக்குச் சென்றுவிட்டாா். மதியம் 1.30 மணி அளவில் வீட்டின் மேற்கூரையில் இருந்து புகை வரத் தொடங்கியது. அடுத்த சில நிமிஷங்களில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடு அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால் தீயணைப்பு வாகனம் அப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள குடிநீா்த் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனா். இருப்பினும் வீடு மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாயின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் தேவை; குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை!

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா், மேட்டுப்பாளையம் - கோவை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நி... மேலும் பார்க்க

பாஜக மாநகா் மாவட்டத் தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்வு!

கோவை மாநகா் மாவட்ட பாஜக தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா். கிளை மற்றும் மண்டல அளவிலான... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்ட சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடி வந்த 6 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பத... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ... மேலும் பார்க்க

மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை கணபதிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (44), வெல்டிங் தொழிலாள... மேலும் பார்க்க