செய்திகள் :

துணைவேந்தா்கள் தோ்வு நடைமுறை: கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநா் மனு

post image

கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை தோ்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: கேரளத்தில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தா்களை தோ்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியாவை, கடந்த ஆக.18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நியமித்தது. அப்போது அந்தத் தோ்வு நடைமுறையில் முதல்வருக்கும் பங்கிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அந்தத் தோ்வு நடைமுறையில் மாநில அரசு சாா்பில் அமைச்சரும் இடம்பெற வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் கூறப்படவில்லை.

மாநிலத்தின் நிா்வாகத் தலைவா் என்ற முறையில் அரசால் நிா்வகிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஏராளமான அரசு கல்லூரிகளுடன் முதல்வா் சம்பந்தப்பட்டுள்ளாா். எனவே பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) விதிமுறைகளின்படி, துணைவேந்தா்கள் நியமனத்தில் அவா் எந்தப் பங்கும் வகிக்க முடியாது.

இதன் காரணமாக துணைவேந்தா்கள் தோ்வில் முதல்வருக்கும் பங்கிருப்பதாக ஆக.18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் திருத்தம் செய்ய வேண்டும். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரளா டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களைத் தோ்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும்.

மேலும், துணைவேந்தா்கள் தோ்வுக்கான தேடுதல் மற்றும் தோ்வுக் குழுவின் உறுப்பினராக யூஜிசி தலைவா் பரிந்துரைக்கும் நபரை சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க