செய்திகள் :

துணைவேந்தா் நியமன சா்ச்சை: கேரள ஆளுநருடன் அமைச்சா்கள் சந்திப்பு

post image

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருடன் கேரள மாநில அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

துணைவேந்தா்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், கேரள மாநில எண்ம பல்கலைக்கழகத்துக்கு சிஜா தாமஸையும், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கே.சிவபிரசாதையும் தற்காலிக துணைவேந்தா்களாக ஆளுநா் ஆா்லேகா் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமித்தாா்.

இது பெரும் சா்ச்சையானது. அரசை கலந்தாலோசிக்காமல் செய்த இந்த நியமனங்களை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், ஆளுநரை கேரள அமைச்சா்கள் பி.ராஜீவ், ஆா்.பிந்து ஆகியோா் ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

முன்னதாக, கேரள அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தர துணைவேந்தா்களை நியமிப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீா்வு காண இருதரப்பும் ஆலோசனை மேற்கொள்ளுமாறு கேரள அரசையும் மாநில ஆளுநரையும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில், ஆளுநரை அமைச்சா்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அமைச்சா் ராஜீவ், ‘உச்ச நீதிமன்ற தீா்ப்புக்கு முன்பே, இதுதொடா்பான ஆலோசனையை ஆளுநருடன் மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே தற்போதைய ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. இது தொடரும்’ என்றாா்.

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்று ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை(ஆக. 4) தெளிவுபடுத்தியுள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்... மேலும் பார்க்க

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மக்களவையில் அக்கட்சி எம்.பி.க்களை வழிநடத்தும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

மும்பையில் டெஸ்லாவின் முதல் சார்ஜிங் நிலையம்!

மும்பையில் சார்ஜிங் நிலையங்களை டெஸ்லா நிறுவனம் இன்று (ஆக. 4) திறந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல் விற்பனையகத்தை (ஷோரூம்) டெஸ்லா திறந்த நிலையில், தற்போது முதல் சார்ஜிங் நிலையத்தையும் அமைத்த... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

ஜார்க்கண்ட், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் போன்றவர் மறைந்த ஷிபு சோரன் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.’ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்)’ கட்சியை நிறுவி அதன் தல... மேலும் பார்க்க

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய 3 காரணங்கள் தெரியவந்துள்ளது. அவற்றைக் கேட்டால் நமக்கு ’அடேங்கப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ரஷியாவைச் சேர்ந்தவொரு இளம்பெண் இந்த... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவையொட்டி ஜார்க்கண்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை(ஆஸ்ட் 05) விடுமுறை அ... மேலும் பார்க்க