செய்திகள் :

துணை வேந்தர், பெண் சிசுக்கொலைகளை தரவுகளோடு ஆவணப்படுத்தியவர் - கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

post image

பேராசிரியர், கல்லூரி முதல்வர், துணை வேந்தர், கல்வியாளர் என கல்வித்துறையில் பல்வேறு முகங்களைக் கொண்ட வசந்தி தேவி இன்று காலமானார்.

`நம் சமூகப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்க முடியும்’ என்ற முழக்கத்தையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தவர், வசந்தி தேவி.

40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கல்வித்தளத்திலும், சமுதாயத்திலும் மாற்றங்களுக்கு வித்திட்டு வந்தவர்.

1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார்.

தமிழன்னை விருது பெற்ற வசந்தி தேவி
தமிழன்னை விருது பெற்ற வசந்தி தேவி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பையும் ஒருங்கிணைத்து, பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது முதல் பல பணிகளை முன்னெடுத்தார்.

கற்றல் நலனுக்கான `பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்’தை தொடங்கிதொடர்ந்து களமாடி வந்தார்.

பள்ளி மாணவர்களின் தற்கொலை அவலங்களைத் தடுக்க மிகுந்த அக்கறை காட்டுபவர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியபோது பெண்கள் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உலகுக்கு கவனப்படுத்தினார்.

தமிழன்னை விருது பெற்ற வசந்தி தேவி
தமிழன்னை விருது பெற்ற வசந்தி தேவி

தமிழக அரசு உருவாக்கியிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு விலும் பங்களித்திருக்கிறார். உரையாடல்கள், கட்டுரைகள், புத்தகங்கள், செயல்பாடுகள் எனச் சமூக முன்னேற்றத்துக்கு பங்களித்து வந்த இவர் தனது 87 வயதில் காலமானார்.

இவருக்கு 2023-ம் ஆண்டிற்கான அவள் விகடனின் 'தமிழன்னை' விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

NEET: “100 நாள் வேலை திட்டத்தில் தாய்; முயற்சிதான் முக்கியம்" – சாதித்த தனுஷா!

முயற்சிக்கும் மனம் இருந்தால், ஏழ்மை ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம், கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த தனுஷா. அரசு பள்ளி மாணவியான இவர் மூன்று வருடங்களாக தொடர்ந்து ம... மேலும் பார்க்க

NMMS: பள்ளி மாணவர்களுக்கு வருடத்துக்கு 12,000 உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ்., எனும் 'நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்' திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் தகுதியான பள்ளி மாணவ -மாணவியர் தற்போது விண்ணப்பிக்கலாம்.பள்ளி இடைநிற்றலை தடுக்கவும், ... மேலும் பார்க்க

`படித்த பழங்குடியின பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பணி' - ஷீலாவை நெகிழ்ந்து வாழ்த்தும் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பேணு அருகேயுள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தாவர் கோவிந்தன். அரசு ரப்பர் கழகத்தில் ரப்பர் மரங்களில் பால் வடிக்கும் பணியாளராக இருந்தார். இவரின் மனைவி ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 2 ஆறுகளை கடந்து 10 கி.மீ தூரம் நடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்

மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களில் சரியான போக்குவரத்து வசதியோ அல்லது சாலை வசதியோ கிராங்களில் இல்லை. இதனால், கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மலைப்பகுதியில் ... மேலும் பார்க்க