செய்திகள் :

துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?

post image

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கியை புறந்தள்ளுவோம் என்ற கோஷத்தின் அடிப்படையில், ஆப்பிள் முதல் மார்பிள் வரை 2.84 மில்லியன் டாலர் இறக்குமதி சரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்று இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், நேரடியாகவே பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதாக துருக்கி அறிவித்துவிட்டது.

நாடுதான் முதலில் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டின் பெரும் வணிகர்கள் பலரும், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள். அதில் முதலிடங்களில் ஆப்பிள், மார்பிள் உள்ளன.

ஏற்கனவே, துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, இந்தியா, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதைக் காட்டிலும் அதிகளவில் ஏற்றுமதியும் செய்து வருவதாகவும், கடந்த 2024 - 25 ஏப்ரல் - பிப்ரவரி காலக்கட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 5.2 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 1.5 சதவீதமாகும்.

அதே காலக்கட்டத்தில் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்திருப்பது 2.84 பில்லியன் டாலர்கள். இது ஒட்டுமொத்த இறக்குமதியில் 0.5 சதவீதம்தான் என்கின்றன தரவுகள்.

இந்தியா, துருக்கிக்கு வாகன உதிரிபாகங்கள், இயந்திரங்கள், மருந்துகள், பருத்தி உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. துருக்கியிலிருந்து எண்ணெய், தங்கம், மார்பிள், அப்பிள்கள், காய்கறிகள், சிமெண்ட், கெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு ஆப்பிள் வழங்கும் முக்கிய நாடுகளில் துருக்கி முதலிடத்தில் இருந்தது.

இறக்குமதி குறைந்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை! - கேரள அரசு அறிவிப்பு

கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 ஆம் தேதியில்... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதல்.. பூஞ்ச் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் ​​பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.நிவாரணப் பணி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

புதிய சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட... மேலும் பார்க்க