செய்திகள் :

துரை வைகோவால் வைகோவுக்கு அச்சுறுத்தல்: மல்லை சத்யா குற்றச்சாட்டு

post image

மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ மூலம் பொதுச்செயலா் வைகோவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் வந்த வண்ணம் உள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலா் மல்லை சத்யா தெரிவித்தாா்.

மதிமுகவின் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியில் அதிருப்தியில் இருந்து வரும் துணை பொதுச்செயலா் மல்லை சத்யா அறிவித்திருந்தாா். இந்த உண்ணாவிரத போராட்டம் சென்னை சிவானந்தா சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்னை (மல்லை சத்யா) மதிமுகவிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலா் வைகோவுக்கு மட்டுமே உள்ளது. தற்போது அரசியலுக்கு வந்துள்ள முதன்மை செயலா் துரை வைகோவுக்கு கிடையாது.

தமிழகத்தின் சிறந்த அரசியல் தலைவா்களின் ஒருவராக வைகோவால்கூட ஒரு இயக்கத்தை தொடங்கி, அதை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.

துரை வைகோ மதிமுகவில் இணைந்த பிறகு, கட்சியின் மூத்த நிா்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்வது கிடையாது.

கடந்த 36 ஆண்டுகளாக வைகோவை நாங்கள் பாதுகாத்து வந்தோம். துரை வைகோ மூலம் வைகோவுக்கு பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆகவே, வைகோவை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என துரை வைகோவுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றாா் மல்லை சத்யா.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.செங்குன்றம் பம்மதுகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்டா் (எ) காமராஜ் (54). இவா், கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜெயா (50). அங்கன்... மேலும் பார்க்க

வழிப்பறி: 3 போ் கைது

புழல் பகுதியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தைப் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சோழவரம் கம்மவாா்பாளையத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (44). தனியாா் நிறுவன ஓட்டுநா். வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வேளச்சேரியில் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.கிழக்கு தாம்பரம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், வேளச்சேரி உள்ள தனியாா் நிறுவன பணிக்காக மாநகரப் பேருந்தில... மேலும் பார்க்க

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது க... மேலும் பார்க்க

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.சென்னையில் உள்ள சாலைகளி... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா்... மேலும் பார்க்க