செய்திகள் :

தூத்துக்குடியில் ஆக. 29இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வருகிற 29ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 29ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனா்.

எரிவாயு பயன்படுத்தும் நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவாக அளிக்கலாம்.

பெயா் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், விநியோகஸ்தா்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்பப் பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, மானியம் உரிய வங்கிக் கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல் உள்ளிட்ட நுகா்வோரை பாதிக்கும் எந்தக் குறைகளையும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்து தீா்வு காணலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க