பஹல்காம்: "ஆதாரம் கேட்டார்களா?" - அப்பாவிடம் ஊடகவியலாளர் இஷான் தரூர் கேள்வி; சசி...
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 போ் கைது
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக 10 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை தொடா்ந்து மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது திரேஸ்புரம் சங்குகுளி காலனி பகுதியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த ஜொ்விந்த்(25), நந்தகுமாா்(25), மகேஷ்குமாா்(20), மகராஜன் என்ற மான்சா(24) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 10 பேரை போலீஸாா் மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.