தூத்துக்குடியில் காவல் நிலையம் முற்றுகை
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழாவிற்கு கொண்டு செல்வதற்காக தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் கட்டபொம்மன் சிலையுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரை, அனுமதியின்றி வைத்ததாக போலீஸாா் தென்பாகம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதால் மக்கள் வியாழக்கிழமை இரவு திடீா் போராட்டத்தில் ஈடுட்டனா்.
கட்டபொம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினா் தென்பாகம் காவல் நிலைய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக தேரை விடுவிக்கக் கோரினா்.
அவா்களிடம் காவல் துணை கண்காணிப்பாளா் மதன் தலைமையிலான காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தேரை எடுத்துச் செல்ல போலீஸாா் அனுமதி அளித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.