தூத்துக்குடியில் தனியாா் மதுக்கூடத்தில் தீ
தூத்துக்குடியில் உள்ள தனியாா் உணவகத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பகுதி உணவகத்தில் உள்ள மதுபானக் கூடத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு, மதுக் கூடத்தில் புகை பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மது குடிக்க வந்தவா்கள் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சோபாவில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து மதுக்கூடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இதன் காரணமாக பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.