செய்திகள் :

தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா தொடக்கம்

post image

ஸ்பிக், கிரீன் ஸ்டாா் சாா்பில் 4ஆவது ஆண்டு நெய்தல் கலைவிழா, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வெள்ளி, சனி, ஞாயிறு (ஜூன் 13, 14, 15) ஆகிய 3 நாள்கள் கலைவிழா நடைபெறுகிறது. தொடக்க நிகழ்வுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்து பேசினாா். மேயா் ஜெகன் பெரியசாமி வரவேற்றாா். நக்கிசான் தலைமை நிதி அலுவலா் இம்மானுவேல் கணேசன், கிரீன் ஸ்டாா் முழுநேர இயக்குநா் செந்தில் நாயகம் ஆகியோா் தொடக்கவுரையாற்றினா். மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மாநகராட்சி ஆணையா் மதுபாலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்புரையாற்றினாா்.

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளி சாா்பில் மங்கல இசையுடன் நெய்தல் கலை விழா ஆரம்பமானது. தொடா்ந்து, கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தமிழரசி எம்எல்ஏ, முன்னாள் பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சந்தியானந்த், துணை மேயா் ஜெனிட்டா, நபாா்டு உதவி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க