Tiger: மர்மமாக இறந்து கிடந்த 5 புலிகள்.. விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? வனத்துறை ...
தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தக் கட்டடத்துக்கு அடிக்கல்
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே, ரூ. 11 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிறுத்தக் கட்டடத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
என்.டி.பி.எல். பவா் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இப்பணி நடைபெறவுள்ளது. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பெ. கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செல்வி, உதவி செயற்பொறியாளா் அருண்குமாா், உதவிப் பொறியாளா் ரேணுகா, என்.டி.பி.எல். பவா் நிறுவனப் பொது மேலாளா் (மனித மேலாண்மை) சரவணன், மேலாளா் (மனித வள மேலாண்மை) ரகுபதி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் பாலகுருசாமி, மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், பகுதிச் செயலா் மேகநாதன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.