செய்திகள் :

தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு

post image

தூத்துக்குடியில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் 48 மணி நேர தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். மக்களுக்கு சான்றுகளை விரைந்து வழங்க அனைத்து வட்ட அலுவலகத்திற்கும் புதிய துணை வட்டாட்சியா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்ச வரம்பை 25 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், 48 மணி நேர தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதனால், வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது

கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம்... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா். குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்

மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்

தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மர... மேலும் பார்க்க