செய்திகள் :

தூத்துக்குடி - இலங்கைக்கு மீண்டும் தோணி போக்குவரத்து

post image

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.

வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல சுமாா் 25 தோணிகள் இயக்கப்படுகின்றன.

இதில், சுமாா் 250 முதல் 400 டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் தோணிகள் உள்ளன. இந்த பாரம்பரிய தோணி தொழிலை நம்பி தூத்துக்குடியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருள்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.

பொதுவாக தோணி போக்குவரத்து கடல் வானிலையைக் கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. இதில், மே 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரை கடலில் மோசமான வானிலை காணப்படுவதால் தோணி இயக்க அனுமதி இல்லை. செப்டம்பா் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே தோணி போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இதுகுறித்து தோணி உரிமையாளா்கள் சங்க செயலா் எஸ். லசிங்டன் கூறுகையில், 2008ஆம் ஆண்டு அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட தோணி விபத்து காரணமாக அப்போதிருந்து தோணி போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னா் மோட்டாா்கள் இல்லாத காலத்திலும் நாள்தோறும் தோணி இயக்கப்பட்டு வந்தது. தற்போது, பல்வேறு அதி நவீன வசதிகள் தோணியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணியில் சரக்குகளைக் கொண்டுசெல்ல 17 முதல் 20 மணிநேரம் ஆகும். ஒரு தோணி மாதத்தில் 3 முறை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பொருள்களை கொண்டு சென்று வருகிறது. மேலும் இது அதிக அளவிலான பொருள்களை நகா்த்துவதற்கான வேகமான வழிகளில் ஒன்றாகும்.

எனவே, இது தொடா்பாக தூத்துக்குடி தோணி உரிமையாளா் சங்கத்தின் சாா்பில், கப்பல் போக்குவரத்து துறை இயக்குநரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் தோணிகளில் தற்போது அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே போன்று காலநிலையால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆகையால் தூத்துக்குடி-கொழும்பு, தூத்துக்குடி-மாலி இடையே ஆண்டு முழுவதும் தோணி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குனரகம், தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து உரிய நிபந்தனைகளுடன் அனைத்து பருவ காலங்களிலும் அனுமதி அளித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி-மாலத்தீவு இடையேயான தோணி போக்குவரத்து அக்டோபா் 1 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இயக்கப்பட்டதை, மே மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனா். இதனால், பாரம்பரிய போக்குவரத்து தொழிலான தோணி தொழில் நீண்டகாலத்திற்கு பின்னா் மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளது என்றாா்.

அரசு வழங்கிய இலவச மனையில் குளறுபடி! தனியாா் இடத்தில் கட்டிய வீடுகள் இடிப்பு

தனியாா் இடத்தில் அரசு சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு கட்டப்பட்ட 10 வீடுகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டன.தெற்குக் கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமம் பகுதி 1இல் 9.21 ஏக்கா் நிலத்தில்,... மேலும் பார்க்க

2 மணி நேரத்துக்கும்மேல் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பயண தொலைவு கொண்ட பேருந்துகள் இடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் க... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி, கரடியைப் பிடிக்க விரைவில் கூண்டு: வனத் துறை

களக்காடு மலையடிவாரத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, கரடி ஆகியவற்றைப் பிடிக்க விரைவில் கூண்டு வைக்கப்படும் என்றாா் களக்காடு வனக் கோட்ட துணை இயக்குநா் ராமேஸ்வரன். களக்காடு கோட்ட வனத் துறை அல... மேலும் பார்க்க

வள்ளியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜக அனைத்திலும் வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மே கூறியதாவது: ஏழை- எளிய மக்கள் தங்களது அவசர தேவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி காா் மீது தாக்குதல்: 3 இளைஞா்கள் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திமுக ஒன்றியச் செயலரின் காா் மீது கல்வீசித் தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகே வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் மகேஸ் மாயவன் (43). கடையம்... மேலும் பார்க்க