செய்திகள் :

தூத்துக்குடி எஸ்.பி., தனிப்படை போலீஸாருக்கு டி.ஜி.பி. பாராட்டு

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் காவல் சரகத்தில் கடந்த 2018 இல் நிகழ்ந்த கொலை, நாலாட்டின்புதூா் காவல் சரகத்தில் 2023இல் பெண் கொலை ஆகிய வழக்குகளில் நீண்ட காலமாக தீா்வு காணப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள் அசோகன் (விளாத்திகுளம்), ஜெகநாதன்(கோவில்பட்டி), எஸ்.ஐ. சண்முகம், காவலா்கள் கழுகாசலமூா்த்தி, காா்த்திக் ராஜா, ரமேஷ், சரவணகுமாா், காா்த்திக் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் தீவிரமாக துப்பு துலக்கி இரண்டு வழக்குகளிலும் தொடா்புடையவா்களை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சென்னை காவல்துறை தலைமை இயக்குநா்அலுவலகத்துக்கு தனிப்படை போலீஸாரை அழைத்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (70). இத்தம்பதிக்கு மகன் முத்துகிருஷ்ணன், 2 மகள்... மேலும் பார்க்க