செய்திகள் :

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு

post image

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை பணியாளா்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி கடந்த 23-ஆம் தேதி தருவைகுளத்தில் தொடங்கியது. அங்கு 215 விசைப்படகுகளும், கடந்த 26-ஆம் தேதி வேம்பாரில் நடைபெற்ற ஆய்வில் 28 விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில், உதவி இயக்குநா் ஜெனாா்த்தனன் தலைமையிலான 6 ஆய்வுக் குழுவினா் களஆய்வு மேற்கொண்டனா்.

இந்த குழுவினா் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட 183 விசைப்படகுகள், பதிவு செய்யப்படாத 66 விசைப்படகுகள் என மொத்தம் 249 விசைப்படகுகளை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில், விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். இதில், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதனை நிவா்த்தி செய்யப்பட்ட பிறகே படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக வரும் ஜூன் 6-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க