செய்திகள் :

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

post image

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர் விஜய் போராட்டக்காரர்களை நேற்று மாலை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். சீமான், கி.வீரமணி, அ.தி.மு.க எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் போராடும் தூய்மைப் பணியாளர்களிடம் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், தீர்வு கிடைக்கும் வரை சமரசமின்றி போராட்டம் தொடரும் என உறுதியுடன் இருக்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

போராடும் தூய்மைப் பணியாளர்கள்
போராடும் தூய்மைப் பணியாளர்கள்

'சாதிய ஆதிக்க திமிரோடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகிறார்!' - போராட்டக்குழு கடும் குற்றச்சாட்டு

இதற்கிடையில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சுவார்த்தை நடத்தாமல், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இவ்விவகாரத்தில் தலையிடுவது முறையானதல்ல என்று போராடும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, "நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று யார் சொன்னது. 4 நாள்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கேன். தூய்மைப் பணியாளர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

கே.என்.நேரு

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையை சுமுகமாகப் பேசி முடிக்கச் சொல்லியிருக்கிறார். வடமாநில தொழிலாளர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்துவதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்தியானது.

அதிமுக 17,000 தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ததாகக் கூறுவதெல்லாம் பொய்யானது. தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வது ஒரே நாளில் செய்யவேண்டிய விஷியமல்ல. அதுகுறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும்." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்"-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத... மேலும் பார்க்க