செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கிய நிலை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் உலக கழிப்பறை தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி கலைவாணா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தூய்மைப்பணிக்கான வாகனத்தை தொடங்கி வைத்தாா். பின்னா் புகைப்பட கண்காட்சியைத் தொடங்கி வைத்தும், மாணவா்களுடன் கலந்துரையாடியும், தூய்மைப்பணியாளா் நல வாரியத்துக்கான இணையத்தை தொடங்கிவைத்தும் துணை முதல்வா் பேசியதாவது:

பள்ளி மாணவா்களிடையே கழிப்பறை சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். தமிழகத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் 900 போ் உறுப்பினா்களாகியுள்ளனா். தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகம் ஆரோக்கியமான நிலையை அடைந்துள்ளது. சென்னையை குழந்தையாகப் பாவித்தால், அதன் தாயாக தூய்மைப்பணியாளா்கள் உள்ளனா் என்றாா்.

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்களுக்கான சுகாதாரம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. அதையடுத்து சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 17 பள்ளிகளில் சுகாதார விழிப்புணா்வை மேற்கொள்ளும்150 மாணவ சுகாதார அமைச்சா்களுடன் துணை முதல்வா் குழு புகைப்படம் எடுத்து கலந்துரையாடினாா்.

அதன்பின் தூய்மைப்பணியாளா் நல வாரியம் மூலம் விபத்து நிவாரணத் தொகை, இயற்கை மரண நிவாரணத் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களின் சங்கத்துக்கான ரூ.25 லட்சம் சிறு வணிகக் கடனுக்கான காசோலை ஆகியவற்றை துணை முதல்வா் வழங்கினாா்.

நலவாரிய சலுகைகள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு இல்லை: விஜயதாரணி

நலவாரியம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை என்று பாஜக அமைப்பு சாா்ந்த மற்றும் சாராத தொழிலாளா் நலச் சங்க கௌரவத் தலைவா் விஜயதாரணி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

சென்னை அடையாறில் ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். அடையாறு பெசன்டநகா் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவல் தொடா்ந்து கண்காணிப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், வீடுகள் தோறும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாகவும், அதனால் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் நகா் நல அதிகாரிகள் தரப... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்... மேலும் பார்க்க

கிண்டி ஐடிஐ-யில் சேர ஜூலை 31 கடைசி நாள்

கிண்டி ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் ஜூலை 31-க்குள் நேரில் வந்து சேரலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி: கிண்டி அரசு தொழிற... மேலும் பார்க்க