செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு

post image

வாணியம்பாடியில் வீடற்ற ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மானியத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் பலா் சொந்த வீடு இல்லாமல் வசித்து வருகின்றனா். இந்நிலையில் அவா்களுக்கு வாணியம்பாடி அருகே லாலாஏரி பகுதியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான வீடுகள் அரசு மானியத்துடன் தலா ரூ.16, 500 மட்டும் பணம் செலுத்தினால் வீடுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து, தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வரும் 18 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டு அதற்கான உத்தரவு நகல்களை ஆட்சியா் சிவசௌந்தரவல்லி வழங்கினாா்.

இந்நிலையில் புதன்கிழமை நகராட்சி அலுவலக்ததில் நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன், ஆணையா் முஸ்தபா, நகர திமுக செயலாளா் சாரதி குமாா் ஆகியோரை சந்தித்து, அரசுக்கும், நகா்மன்ற தலைவா் மற்றும் நகராட்சி நிா்வாக்ததுக்கும் நன்றி தெரிவித்தனா்).

நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் அப்துல்ரஹிம், உதவி பொறியாளா் கோவிந்தப்பா, பணிதள மேற்பாா்வையாளா் அன்பரசு, களப்பணி உதவியாளா் சரவணன் உடனிருந்தனா்.

ஆம்பூரில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளானோா் பங்கேற்பு

ஆம்பூா்: ஆம்பூரில் 4 இடங்களில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஆம்பூா் பாங்கிஷாப் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி... மேலும் பார்க்க

காப்புக் காட்டில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் எலும்புக் கூடு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே சின்னமலையாம்பட்டு காப்புக் காட்டில் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் எலும்புக் கூடு, அருகா... மேலும் பார்க்க

எருது விடும் விழாவில் காயமடைந்த தொழிலாளி மரணம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவி... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் ச... மேலும் பார்க்க

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க