செய்திகள் :

தூய்மைப் பணியாளா் ஊதிய பிரச்னையில் ஆட்சியா் தலையிட கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தொடரும் ஊதிய பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தொழிலாளா் உதவி ஆணையா் உள்ளிட்டோா் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், இதுவரை அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.

எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் க. அறவாழி, துணைத் தலைவா் தரும. கருணாநிதி சிறப்புரையாற்றினா். செயலா் முனியம்மாள், துணைத் தலைவா் ஆனந்தராஜு, பொருளாளா் பாலசுப்பிரமணியன், இணைச் செயலா் கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு காண வட்டாட்சியா் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருக... மேலும் பார்க்க

விவசாயிகளின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் விவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தேநீா்க்கடை தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேநீா்க்கடை தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சரகத்துக்குள்பட்ட ஒரு கிர... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்ட... மேலும் பார்க்க