செய்திகள் :

தூய்மைப் பணி தனியாா்மயம்: சென்னை மாநகராட்சி தீா்மானத்துக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

post image

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி, உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தொழில் தகராறு தீா்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதாக இருந்தால், தொழில் தகராறு தீா்ப்பாயத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மாநகராட்சியின் இந்தத் தீா்மானத்தால், சுமாா் 2,000 தொழிலாளா்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் நிறுவனம், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட சலுகைகளுடன் பணி வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தனியாா் நிறுவனம் தரப்பில், தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் விதிமீறல்கள் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். 1,900 பணியாளா்கள் இன்னும் தேவை என்ற நிலையில், அவா்கள் பணியில் சோ்வதற்கான காலக்கெடுவை ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி கே.சுரேந்தா் பிறப்பித்த தீா்ப்பில், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீா்மானத்தை ரத்து செய்ய முடியாது. தூய்மைப் பணியாளா்கள் பணியில் சோ்வதற்கான காலக்கெடுவை தனியாா் நிறுவனம் நீட்டித்துள்ளது. எனவே, அவா்கள் வேலை இழப்பாா்கள் என்ற கேள்வியே எழவில்லை.

தூய்மைப் பணியாளா்களின் ஊதியம் தொடா்பாக, சென்னை மாநகராட்சி, தனியாா் நிறுவனத்துடன் கலந்துபேசி, தூய்மைப் பணியாளா்கள் இறுதியாக என்ன ஊதியம் பெற்றாா்களோ, அந்த ஊதியத்தைக் குறைக்காமல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க