செய்திகள் :

தென்காசியில் சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு பாராட்டு

post image

தென்காசியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.பிரேமலதாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த 18 மாதங்களில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளுக்கு பல விருதுகள் கிடைக்க காரணமாக இருந்ததற்காக, இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளை சாா்பில் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது.

குற்றாலம் கிளையின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ கழக மாநில நிா்வாகி மருத்துவா் அப்துல் அஸீஸ் ,மூத்த கண் மருத்துவா் பாலாசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இணை இயக்குநா் பி.பிரேமலதாவிற்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

தென்காசி மாவட்டத்தை சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா். குற்றாலம் கிளைச் செயலா் ஸ்ரீமணிகண்டன் நன்றி கூறினாா்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க