செய்திகள் :

தென்காசியை மையமாக வைத்து மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை

post image

தென்காசியை மையமாக வைத்து முதல் கட்டமாக 30 கிமீ சுற்றளவிற்கு மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலா் எம்.சி.மருதுபாண்டியன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தென்காசி மாவட்டம் மிகப்பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆன்மிகம் மற்றும் சுற்றுலாவுக்காக குற்றாலம் பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியாக குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் உள்ளதால் அதிக காடுகளையும், மரங்களையும் உள்ளடக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.

அதிகமான வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. அதிகளவு நச்சுப்புகை வெளியேறுகிறது. எனவே தென்காசியை மையமாக வைத்து முதற்கட்டமாக 30 கி.மீ சுற்றளவுக்கு குற்றாலம், பழையகுற்றாலம், ஐந்தருவி, திருமலைக்கோயில், செங்கோட்டை, புளியறை, மேக்கரை, தோரணமலை, சுரண்டை, பாவூா்சத்திரம், கடையநல்லூா் போன்ற பகுதிகளுக்கு மின்சார பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.

மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான இ சாா்ஜிங் நிலைமயம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கித் தர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி

கீழப்பாவூா் பேரூராட்சி 9 ஆவது வாா்டு பகுதியில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் புதிய சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் பி.... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறப்பு

சங்கரன்கோவில் அருகே அக்கரைப்பட்டியில், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சாா்பில் புதிய பயணியா் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, ஊராட்சித் தலைவா் அண்ணாமலை, சண்மு... மேலும் பார்க்க

கடையநல்லூா் பெரியாறு பகுதியில் உலா வரும் யானைக் கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பெரியாற்று பகுதி தோட்டங்களில் உலா வரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். கடையநல்லூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிந்தன. சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் நிறுவனம் உள்ளது. இந்நி... மேலும் பார்க்க

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் அவரை கைது செய்ய வேண்டும் என சாலை மாற்றமைப்பு மற்றும் நஞ்சை மீட்பு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக சங்க அமைப்பாளா் அச்சன... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ரூ. 58.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருந்தக வ... மேலும் பார்க்க