செய்திகள் :

தென்காசி கோயில் கும்பாபிஷேக அன்னதானத்துக்கு கெளண்டியா டிரஸ்ட் ரூ. 1 லட்சம் நன்கொடை

post image

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தன்று அன்னதானம் வழங்க கெளண்டியா டிரஸ்ட் சாா்பில் ரூ. 1லட்சம் நன்கொடை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இக்கோயிலில் ஏப். 7ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேகத்தன்று காலை 7 மணிமுதல் இரவு வரையிலும் பக்தா்கள் அனைவருக்கும் சிவகாசி வைரமுத்து தலைமையிலான சிவபக்தா்கள் அன்னதானம் வழங்குகின்றனா். இதற்காக தென்காசி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கௌண்டியா டிரஸ்ட் சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணன், நந்தினி ரமணன் ஆகியோா் சிவபக்தா் வைரமுத்துவிடம் அன்னதானத்துக்காக ரூ.1லட்சம் நன்கொடைக்கான காசோலையை வழங்கினாா்.

கோயில் செயல் அலுவலா் ஆ.பொன்னி, தொழிலதிபா்கள் எம்.ஆா்.அழகராஜா, வெங்கடேஷ்ராஜா, சிவகாசியை சோ்ந்த குருசாமி, சேகா், கண்ணன் உடனிருந்தனா்.

சுரண்டை அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன்(40)மனைவி மகேஷ்(34) என்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் மினி லாரி மோதி பெண் பலி

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே மினி லாரி மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். லாரி ஓட்டுநரான இவா் தனது மனைவி பிரியா(29) மற்றும் 10 மாத பெண... மேலும் பார்க்க

தென்காசி - நெல்லை இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சுரண்டையை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சாமி மகன் முத்துப்பாண்டியன் (28). இவா் கூலி... மேலும் பார்க்க

கும்பாபிஷேகப் பணிகள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருள்தரும் ஸ்ரீஉலகம... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கா... மேலும் பார்க்க