செய்திகள் :

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

post image

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்றும் குவாங்சு நகரம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல்வேறு இடங்களில் தீடீர் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மழையால் ஏற்பட்ட சம்பவங்களில் இதுவரை 4 பேர் பலியானதாகவும், நேற்று (ஜூலை 17) மாலை குவாங்சு நகர ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருவர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜூலை 18) தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாயமான 2 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் லீ ஜே மியூங், தலைமையில் நடைபெற்ற பேரிடர் கால ஆலோசனைக் கூட்டத்தில், துறைச் சார்ந்த அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இதில், இன்று (ஜூலை 18) காலை 11 மணி நிலவரப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் இருந்து சுமார் 5,661 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், கனமழையால் 499 பொது மற்றும் 425 தனியார் சொத்துக்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், 328 சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, தென் கொரியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் உண்டான பாதிப்புகளினால், அந்நாட்டு அரசு வானிலை பேரிடருக்கான எச்சரிக்கையை உச்சக்கட்டத்துக்கு நேற்று (ஜூலை 17) உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

‘காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்’

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகா்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா தடை

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பை சா்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பருவ மழை: 700 கைதிகள் இடமாற்றம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக, மண்டி புஹாதின் மாவட்ட சிறைச் சாலையில் இருந்து சுமாா் 700 கைதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடம்மாற்றம்!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப்... மேலும் பார்க்க

கத்தார் உதவியுடன்... 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப... மேலும் பார்க்க