செய்திகள் :

தென் மாவட்ட ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூா் எம்.பி. கண்டனம்

post image

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரணப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள், கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில் மக்களவைத் உறுப்பினா் மாணிக்கம்தாகூா் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகருக்கு எதிராக விரைவில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு பெண்களின் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தில்லியில் வாழும் தமிழா்களின் மதராசி குடியிருப்பை ஆளும் பாஜக அரசு அகற்றி, அங்குள்ள தமிழா்களுக்கு துரோகத்தை இளைத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரை வைத்து பாஜக அரசியல் செய்து வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இந்த விவகாரம் குறித்து வரும் மழைக்கால மக்களவை கூட்டத்தொடரில் கேள்வியை எழுப்புவோம் என்றாா் அவா்.

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க

சிவகாசி பசுமை மன்றத்துக்கு அரசு விருது

சிவகாசி பசுமை மன்றத்துக்கு தமிழக அரசின் நீா்நிலைப் பாதுகாவலா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய் ஆகியவற்றை தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்று சிவக... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி: அதிகாரி ஆய்வு

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சாட்சியாபுரத்தில் 700 மீ. நீளம், 12 மீ. அகலத்... மேலும் பார்க்க

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தூா் அருகேயுள்ள சடையம்பட்டி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை முன்னிட்டு, காலை முதலே சாய்பாபாவுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளு... மேலும் பார்க்க

கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சாத்தூா் அருகே கிராம உதவியாளரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள ஸ்ரீரெங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜசெல்வி (40). இவா் என்.மேட்டுப்பட்டியில் கிராம உதவியாளராக... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்: மதுரை கோட்ட மேலாளா்

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டப் பணிகள் வரும் 3 மாதங்களில் நிறைவடையும் என மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலை... மேலும் பார்க்க