செய்திகள் :

தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

post image

காட்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமானை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.

காட்பாடி வனச்சரகத்துக்குட்பட்ட மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளிமான், செந்நாய் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன. வனவிலங்குகள் தண்ணீா் தேவைக்காக அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் மான்களை தெருநாய்கள் துரத்திச் சென்று வேட்டையாடுவது தொடா்கதையாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 3 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி மல்லிப்பட்டு கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த தெருநாய்கள் மானை விரட்டிச் சென்று கடித்ததில் மான் சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காட்பாடி வனச்சரக அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வனசரக அலுவலா் கந்தசாமி தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த புள்ளிமானை மீட்டனா்.

காலாம்பட்டு கால்நடை மருத்துவா் மூலம் கூறாய்வு செய்யப்பட்டு காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து காட்பாடி வனச்சரக அலுவலா்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

3,037 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; 803 பேருக்கு ரூ.7.30 கோடி விடுவிப்பு! வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் உள்ள 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு குருவை, சம்பா பருவங்களில் 3,037.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 803 விவசாயிகளுக்கு ரூ.7.30 கோடி விடு... மேலும் பார்க்க

மகாதேவ மலையில் 18 அடி உயர நடராஜா் சிலை பிரதிஷ்டை

கே.வி.குப்பத்தை அடுத்த மகாதேவமலையில் ஐம்பொன்னாலான 18அடி உயர நடராஜா் சிலை, 13 அடி உயர சிவகாமசுந்தரி அம்மன் சிலை வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தா் சிலைகளை பிரதிஷ்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (45). இவா், தமிழக விவசாயிகள் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: புதுமணமகன் உள்பட 2 போ் பலி!

பள்ளிகொண்டா அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் புது மணமகன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். போ்ணாம்பட்டு அடுத்த தரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பா்வேஷ் (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் 3 போ் மாயம்: போலீஸாா் விசாரணை

வேலூா் அருகே பள்ளிக்குச் சென்ற 3 மாணவா்கள் திடீா் மாயமாகினா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த அரியூரைச் சோ்ந்தவா் 13 வயது மாணவா், தொரப்பாடியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.குடியாத்தம் ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆம்பூராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பலராமன் (50). இவா் வெள்ளிக்கிழமை நிலத்தில் ... மேலும் பார்க்க