செய்திகள் :

தெற்கு தில்லி சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

தெற்கு தில்லியின் ஹெளஸ் காஸ் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 26 வயது இளைஞா் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுஷாந்த், கடந்த மே 18-ஆம் தேதி பஞ்சீல் பூங்கா அருகே உள்ள எரிபொருள் நிரப்பு மையம் அருகே வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவருடைய வாகனம், அங்கிருந்த நடைபாதையின் மீது மோதியது.

விபத்தில் காயமடைந்த சுஷாந்தை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

பின்னா், இந்த விபத்து தொடா்பாக ஹெளஸ் காஸ் பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினா் மருத்துவமனைக்குச் சென்றனா். அப்போது, சுஷாந்த் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினரிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்த சுஷாந்த் நொய்டாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க