செய்திகள் :

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 கமாண்டோக்கள் வீரமரணம்

post image

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 போ் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

தெலங்கானாவில் சத்தீஸ்கா் மாநிலத்தையொட்டிய முலுகு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்துள்ளதாகவும், பழங்குடியினா் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மாவோயிஸ்டுகள் அண்மையில் நோட்டீஸ் வெளியிட்டிருந்தனா்.

இதையடுத்து, காவல் துறையின் ‘கிரேஹெளண்ட்’ கமாண்டோ படையினா் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை வியாழக்கிழமை தொடங்கினா். வஜீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இச்சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த 40 மாவோயிஸ்டுகள் திடீரென கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனா். அத்துடன், கமாண்டோக்களை நோக்கி, சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். இதையடுத்து, கமாண்டோக்களும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டனா். துப்பாக்கிச் சண்டையில் 3 கமாண்டோக்கள் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

உயிரிழந்த கமாண்டோக்களின் உடல்கள் வாரங்கல்லுக்கு கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடைபெறுவதாக மாநில டிஜிபி ஜிதேந்தா் தெரிவித்தாா்.

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் வனங்கள் நிறைந்த கா்கேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் மாபெரும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினா் கடந்த 2 வாரங்களாக மேற்கொண்டுள்ளனா். இதில் 26 நக்ஸல்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்: தகவல்

பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதி இந்திய கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் எல்லையோரப் பக... மேலும் பார்க்க

போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.மத்திய மின்னனுவ... மேலும் பார்க்க

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க