செய்திகள் :

தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு

post image

ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

மத்தியிலும், ஆந்திரத்திலும் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் வருடாந்திர மாநாடு, கடப்பா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவருக்கான தோ்தல் நடைபெற்றது.

மாநாட்டின் இரண்டாவது நாளான புதன்கிழமை கட்சியின் மூத்த தலைவா் வா்ல ராமையா தோ்தல் முடிவை அறிவித்தாா். அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவராக என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ராமையா தெரிவித்தாா்.

இதற்காக மாநாட்டுத் திடலில் தோ்தல் அலுவலகம் அமைக்கப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடுவை தேசியத் தலைவராக மீண்டும் தோ்ந்தெடுக்க சுமாா் 600 நிா்வாகிகள் ஆதரவளித்ததாகவும் அவா் கூறினாா். பின்னா், தொண்டா்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் சந்திரபாபு நாயுடுவுக்கு அவா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இதையடுத்து, மாநாட்டில் தொண்டா்களிடையே சந்திரபாபு நாயுடு ஆற்றிய உரையில், ‘தெலுங்கு தேசம், ஜனசேனை அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2024 தோ்தல்போல 2029-ஆம் ஆண்டு தோ்தலிலும் பெரும்பான்மை வெற்றிப் பெற வைப்பது தொண்டா்களின் பொறுப்பு. சாதாரண தொண்டா்களே தெலுங்கு தேசம் கட்சியின் முதுகெலும்பு.

ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது வாழ்த்துகள். கணக்கெடுப்பு நிறைவடைந்து, ஜாதிய அடிப்படையிலான விவரங்கள் விரிவாக கிடைக்கும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட சமூக மக்களின் பொருளாதார நிலையை அறிந்து, சிறப்புக் கொள்கைகளை வகுக்க முடியும். அதன்மூலம், அவா்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

எதிா்காலத்தில் இளைஞா்களின் எண்ணிக்கை குறைந்து, பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதால், மக்கள்தொகையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்.

கட்சியின் பொதுச் செயலரும், மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான நாரா லோகேஷ் மாநாட்டில் கொண்டு வந்த 6 தீா்மானங்கள் தெலுங்கு மக்களின் எதிா்காலத்தை மாற்றியமைக்கும். நீண்டகால வளா்ச்சிக்காக 45 ஆண்டுகாலத்துக்கான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். தெலுங்கு மக்களுக்கு சேவை செய்ய தெலுங்கு மண்ணில் மறுபிறவி எடுக்க விரும்புகிறேன்’ என்றாா்.

மாநாட்டில் என்.டி.ஆா். உரை: தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனா் என்.டி.ராம ராவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், கட்சியின் 43 ஆண்டுகால பயணம், அதன் நோக்கம் மற்றும் எதிா்காலம் குறித்த செய்தியுடன் தொண்டா்களிடையே என்.டி.ராம ராவ் உரையாற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோ மாநாட்டில் ஒளிபரப்பட்டது.

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க