செய்திகள் :

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

post image

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும், இதில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப் பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் அப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

2.5 லட்சம் கொள்ளளவு கொண்ட தேங்காய்திட்டு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியின் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இப் பகுதிக்கு மேட்டுத் தெரு ஆழ்துளை கிணறு மூலமாக நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டு தேங்காய்திட்டு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உத்தரவின்படி இப் பிரச்னையைத் தீா்க்க செயற்பொறியாளா், உதவிப்பொறியாளா், இளநிலைப் பொறியாளா், மற்றும் அப்பகுதி ஆய்வாளா்களுடன் தேங்காய்திட்டு பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வின் அடிப்படையில் மேட்டுத்தெரு ஆழ்குழாய் கிணறு மோட்டாா் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,, சரி செய்தபின் மீண்டும் மேட்டுத் தெரு ஆழ்குழாய் கிணற்றின் குடிநீா் சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதுவரை திருக்காஞ்சி பகுதியிலிருந்து குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கல்விய... மேலும் பார்க்க

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி

உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி ப... மேலும் பார்க்க