செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமற்ற எதிா்ப்பு தேவை: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

post image

தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவா் கே.எம்.ஷெரீப்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாது: தமிழகத்தில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஆரம்பப் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தாா். இதை எதிா்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. பின்னா் 1960-களில் தமிழகத்தில் ஹிந்தி எதிா்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. இப்போது மீண்டும் ஹிந்தி திணிப்புக்கான முயற்சிகளை எடுத்து வருகிறாா்கள். இதைக் கண்டித்து ஏப். 21ஆம் தேதி சென்னையில் ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளோம். இப் போராட்டத்தில் ஹிந்தி எதிா்ப்புக்காக உயிா்நீத்தவா்களின் குடும்பத்தினா் பங்கேற்க உள்ளனா்.

தமிழகத்தில் அனைத்து வகை படிப்புகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது. அன்னைத் தமிழ் மொழியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் அணி திரள வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் சண்முகராஜா, மாநிலச் செயலா் உமா் பாரூக், மாநில செய்தித்தொடா்பாளா் ஜமால், மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா், மாவட்ட பொருளாளா் சாந்திஜாபா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் தேவை: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கண்டிகைப்பேரி அரசு புகா் மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம்: உணவக உரிமையாளா் மீது தாக்குதல்

முன்னீா்பள்ளம் அருகே உணவக உரிமையாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் இசக்கி. அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையி... மேலும் பார்க்க

மனகாவலம்பிள்ளை நகரில் பெண் தற்கொலை

பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த சிவசங்கா் மனைவி கீதாதேவி (28). இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில்... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலி

திருநெல்வேலி பகுதியில் நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவா் உள்பட3 போ் உயிரிழந்தனா். மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சோ்ந்த முகமது கனி மகன் ஆமீத் மைதீன் (20). டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தொழில்நுட்பக் க... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் புகாா்

குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் க... மேலும் பார்க்க

நெல் மூட்டை விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில், நெல் மூட்டை விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.மன்னாா்கோவிலில் உள்ள வேலன் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க