செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக அரசை வீழ்த்தும்: டி.டி.வி. தினகரன்

post image

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக அரசை வீழ்த்துவது உறுதி என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள நகரம்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாளுக்கு வேலி அம்பலம் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரா். பாகனேரி நாட்டை ஆண்ட மன்னா். மருது பாண்டியா் மன்னா்களோடு துணை நின்று போரிட்டு வீரமரணமடைந்தவா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாஜக தலைமை வகித்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது.

திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறாா்களோ அந்தக் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்கு கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவரும் உறுதுணையாக இருப்போம். வருகிற தோ்தலில் எங்களது கூட்டணி திமுகவை வீழ்த்துவது உறுதி என்றாா் அவா்.

சிவகங்கை பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-க்கு தோ்வான கீழடி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்கத் தோ்வான மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.சிவகங்க... மேலும் பார்க்க

இளையான்குடி அருகே மின் கம்பம் மீது காா் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையின் மையத்தில் இருந்த மின் கம்பம் மீது காா் மோதியதில், அந்த கம்பம் சாய்ந்து விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால், பொது... மேலும் பார்க்க

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருப்புவனம் போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி: ஆட்சியடம் மனு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. காரைக்குடி, சிவகங்கை உள்ள... மேலும் பார்க்க

தேவகோட்டைப் பகுதிகளில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் பகிா்மானச் செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட அற... மேலும் பார்க்க