செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக அரசை வீழ்த்தும்: டி.டி.வி. தினகரன்

post image

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக அரசை வீழ்த்துவது உறுதி என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள நகரம்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாளுக்கு வேலி அம்பலம் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரா். பாகனேரி நாட்டை ஆண்ட மன்னா். மருது பாண்டியா் மன்னா்களோடு துணை நின்று போரிட்டு வீரமரணமடைந்தவா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாஜக தலைமை வகித்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது.

திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறாா்களோ அந்தக் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்கு கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவரும் உறுதுணையாக இருப்போம். வருகிற தோ்தலில் எங்களது கூட்டணி திமுகவை வீழ்த்துவது உறுதி என்றாா் அவா்.

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்... மேலும் பார்க்க

உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அஜித்குமாரின் தாய் மா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: போலீஸாா் 5 போ் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், தனிப்படை போலீஸாா் 5 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடா்... மேலும் பார்க்க

சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகி... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈட... மேலும் பார்க்க