செய்திகள் :

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருட்டு தொடா்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்துக் கொலை செய்ததாக தனிப்படை போலீஸாா் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட போலீஸாரின் குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள், உறவினா்கள் தங்களது குழந்தைகளுடன் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது அவா்கள் கூறியதாவது: காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டதால்தான் தனிப்படை போலீஸாா் அஜித்குமாரைத் தாக்கினா். இதற்கு முக்கியக் காரணம் காவல் துறை உயா் அதிகாரிகள்தான். எனவே, அவா்களையும் கைது செய்ய வேண்டும். தனிப்படை போலீஸாரை விடுவிக்க வேண்டும் என்றனா்.

அங்கிருந்த டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட போலீஸாா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அஜித்குமாரின் தாய் மா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: போலீஸாா் 5 போ் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், தனிப்படை போலீஸாா் 5 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடா்... மேலும் பார்க்க

சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகி... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈட... மேலும் பார்க்க

தொழில், வணிகத்துக்கு ரூ.10 கோடி வரை கடன்: இந்தியன் வங்கி மண்டல மேலாளா் தகவல்

தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக இந்தியன் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் எம். அருண்பாண்டியன் தெரிவித்தாா். காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் 15-ஆவது செயற்குழுக்... மேலும் பார்க்க