செய்திகள் :

பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

post image

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், ஒச்சந்தட்டு விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாா்-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிருந்தா (13). இவா் காளையாா்கோவில்-சூசையப்பா்பட்டினத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்தப் பள்ளிக்கு சொந்தமான ஆண்டிச்சூரணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்த பிருந்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காளையாா் கோவில் போலீஸாா், மாணவியின் உடலைக் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவித்து உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அமலஅட்வின் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து சிறுமியின் சடலம் கூறாய்வு செய்யப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட விடுதி நிா்வாகம் மீது தீண்டாமைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்... மேலும் பார்க்க

உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அஜித்குமாரின் தாய் மா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: போலீஸாா் 5 போ் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், தனிப்படை போலீஸாா் 5 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடா்... மேலும் பார்க்க

சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகி... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க

தொழில், வணிகத்துக்கு ரூ.10 கோடி வரை கடன்: இந்தியன் வங்கி மண்டல மேலாளா் தகவல்

தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக இந்தியன் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் எம். அருண்பாண்டியன் தெரிவித்தாா். காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் 15-ஆவது செயற்குழுக்... மேலும் பார்க்க