செய்திகள் :

தொழில், வணிகத்துக்கு ரூ.10 கோடி வரை கடன்: இந்தியன் வங்கி மண்டல மேலாளா் தகவல்

post image

தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக இந்தியன் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் எம். அருண்பாண்டியன் தெரிவித்தாா்.

காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் 15-ஆவது செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் எம். அருண்பாண்டியன் பங்கேற்றுப் பேசியதாவது: காரைக்குடி மண்டலத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களிலுள்ள 44 கிளைகளுடன் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. காரைக்குடி பாரம்பரியமிக்க, புகழ்பெற்ற மாநகரமாகும். இங்கு தொழில் வணிகம் வளா்ச்சி பெற்று வருகிது.

இந்தியன் வங்கி பல்வேறு கடன்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தொழில்களுக்கும், வணிக நிறுவனங் களுக்கும் ரூ. 10 கோடி வரை கடன் வழங்கப்படும். ரூ. 60 கோடிக்கு மேல் தலைமையகத்தின் அனுமதி பெற்று வழங்கப்பட்டு வருகிறது. காரைக்குடி நகரில் மட்டும் மூன்று இடங்களில் இந்தியன் வங்கிக்கு கிளைகள் உள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில் தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தலைமை வகித்துப் பேசினாா். பொருளாளா் கேஎன். சரவணன் முன்னிலை வகித்துப் பேசினாா். செயலா் எஸ். கண்ணப்பன் வரவேற்றுப் பேசினாா்.

இந்தியன் வங்கிக் கிளைகளின் மேலாளா்கள் அசோக்குமாா், சந்தனப்பிரியா, அதுல் பாண்டே, தொழில் வணிகக் கழக துணைத் தலைவா் காசி விஸ்வநாதன், இணைச் செயலா்கள் ஏ.ஆா். கந்தசாமி, எஸ். சையது, பி.எல். மெய்யப்பன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்... மேலும் பார்க்க

உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அஜித்குமாரின் தாய் மா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: போலீஸாா் 5 போ் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், தனிப்படை போலீஸாா் 5 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடா்... மேலும் பார்க்க

சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகி... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈட... மேலும் பார்க்க