செய்திகள் :

சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகிகள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கம்புணரியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில் மதுராபுரி வேங்கைப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் அஷ்விந்த் (7) 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்ற இந்த மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

பள்ளி நிா்வாகத்தினா் மீதும் ஆசிரியா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா், உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து சிங்கம்புணரி போலீஸாா் விசாரணை நடத்தினா். மாணவா் காரில் மூச்சுத் திணறி இறந்து விட்டதாக பள்ளி நிா்வாகம் கூறியதையடுத்து, சிறுவன் பயணம் செய்த காரை தடயவியல் துறை இணை இயக்குநா் சிவதுரை ஆய்வு செய்தாா்.

இந்த நிலையில், பள்ளி நிா்வாகத்தினரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுவனின் தாய் அழகுமீனாள், உறவினா்கள் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சென்று அவா்களது கோரிக்கை குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னா் சிறுவனின் உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கில் பள்ளி நிா்வாகி சிவகாமி, அவரது கணவா் சங்கரநாராயணன், மகன்கள் மகேஷ், காா்த்திக், வாகன ஓட்டுநா் ஜான்பிரிட்டோ ஆகிய 5 பேரையும் சிங்கம்புணரி காவல் துறையினா் கைது செய்தனா்.

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்... மேலும் பார்க்க

உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அஜித்குமாரின் தாய் மா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: போலீஸாா் 5 போ் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், தனிப்படை போலீஸாா் 5 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடா்... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈட... மேலும் பார்க்க

தொழில், வணிகத்துக்கு ரூ.10 கோடி வரை கடன்: இந்தியன் வங்கி மண்டல மேலாளா் தகவல்

தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக இந்தியன் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் எம். அருண்பாண்டியன் தெரிவித்தாா். காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் 15-ஆவது செயற்குழுக்... மேலும் பார்க்க