செய்திகள் :

உயிரிழந்த கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

post image

மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன் ஆகியோரிடம் அமைச்சா் ஆறுதல் கூறினாா். இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி, மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

முதல்வா் ஆறுதல்: அப்போது அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பேசுமாறு கூறினாா். பின்னா் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பேசிய முதல்வா், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தைரியமாக இருங்கள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அமைச்சா் மூலம் செய்து தரப்படும் என்றாா் முதல்வா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மாலதி கூறுகையில், முதல்வரிடம் பேசியது ஆறுதலாக உள்ளது என்றாா். நவீன் கூறுகையில், முதல்வா் என்னிடம் என்ன வேலை செய்கிறீா்கள் என்று கேட்டாா். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்; அரசு வேலை தந்தால் கோயிலில் வேலை வேண்டாம் என கூறினேன் என்றாா்.

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: போலீஸாா் 5 போ் சிறையிலடைப்பு; டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், தனிப்படை போலீஸாா் 5 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதுதொடா்... மேலும் பார்க்க

சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகி... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈட... மேலும் பார்க்க

தொழில், வணிகத்துக்கு ரூ.10 கோடி வரை கடன்: இந்தியன் வங்கி மண்டல மேலாளா் தகவல்

தொழில்கள், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடி வரை கடன் வழங்கப்படுவதாக இந்தியன் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் எம். அருண்பாண்டியன் தெரிவித்தாா். காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் 15-ஆவது செயற்குழுக்... மேலும் பார்க்க