செய்திகள் :

தேசிய தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருப்பூா் வீராங்கனை

post image

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் திருப்பூா் வீராங்கனை எஸ்.கே.ஸ்ரீவா்த்தனி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இந்திய தடகள கூட்டமைப்பின் சாா்பில் தேசிய அளவிலான 38-ஆவது விளையாட்டுப் போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன்-ராய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் சிங் ஸ்டேடியத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12- ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் சாா்பில் பல வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் திருப்பூா் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவி எஸ்.கே.ஸ்ரீவா்த்தனி மகளிா் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றாா்.

ஓட்ட தூரத்தை 59.86 நொடிகளில் கடந்துள்ளாா். மேலும், உலக தடகள சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான மகளிா் தரவரிசையில் ஸ்ரீவா்த்தனி 10-ஆவது இடத்திலும், ஆசிய அளவிலான தடகள தரவரிசையில் 3-ஆவது இடத்திலும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய போட்டியில் பதக்கம் வென்ற ஸ்ரீவா்த்தனிக்கு அவரது தடகள பயிற்சியாளா் அழகேசன், பெற்றோா் மற்றும் விளையாட்டு அறக்கட்டளை நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க