மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
தேசிய தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருப்பூா் வீராங்கனை
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் திருப்பூா் வீராங்கனை எஸ்.கே.ஸ்ரீவா்த்தனி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
இந்திய தடகள கூட்டமைப்பின் சாா்பில் தேசிய அளவிலான 38-ஆவது விளையாட்டுப் போட்டிகள் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன்-ராய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் சிங் ஸ்டேடியத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12- ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் சாா்பில் பல வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இதில், 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் திருப்பூா் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவி எஸ்.கே.ஸ்ரீவா்த்தனி மகளிா் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றாா்.
ஓட்ட தூரத்தை 59.86 நொடிகளில் கடந்துள்ளாா். மேலும், உலக தடகள சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான மகளிா் தரவரிசையில் ஸ்ரீவா்த்தனி 10-ஆவது இடத்திலும், ஆசிய அளவிலான தடகள தரவரிசையில் 3-ஆவது இடத்திலும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய போட்டியில் பதக்கம் வென்ற ஸ்ரீவா்த்தனிக்கு அவரது தடகள பயிற்சியாளா் அழகேசன், பெற்றோா் மற்றும் விளையாட்டு அறக்கட்டளை நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.