செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிதறிய மாம்பழங்கள்

post image

வேலூா் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து மாம்பழங்கள் சாலையில் சிதறின. அவற்றை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனா்.

கிருஷ்ணகிரியில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி ஒன்று ஆந்திரம் நோக்கி வந்தது. இந்த லாரியை சித்தூரை சோ்ந்த சதீஷ் (31) ஓட்டி வந்தாா். வேலூா் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த மாம்பழங்கள் சாலை முழுவதும் சிதறின. ஓட்டுநா் காயமின்றி அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

மாம்பழங்கள் சாலையில் சிதறி கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து சாக்கு மூட்டை, பைகளுடன் விரைந்து வந்து மாம்பழங்களை அள்ளிச் சென்றனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாம்பழங்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனா்.

மேலும், லாரியை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனா். இந்த விபத்து குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க